ஆகாத தீதார் - ஆமினா முஹம்மத்
மரணித்தவர்களின் வீடுகளைக் கதைக்களமாகக் கொண்டு படைக்கப்பட்டிருக்கும் இந்த 13 கதைகளும் சிறுகதைத் தொகுப்பு என்ற ஒற்றை வார்த்தையில் கூறிவிட முடியாது. ஒவ்வொரு கதையில் வரும் திருப்புமுனைகளும், முடிவுகளும் நமக்குள் பல கேள்விகளை எழச் செய்கின்றன.
வழக்கமான முறையில், பெண்களுக்கு ஆண்கள் தான் எதிரி என்று பெண்ணியம் பேசாமல், பெண்களுக்கு பெண்களே எதிரி என்று உண்மையை உடைத்து நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல் எழுதியிருக்கும் இவரின் எழுத்துக்களை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை.
இதிலுள்ள ஒவ்வொரு கதையிலும் மரணித்தவர்களின் வீட்டுச்சூழல் வெவ்வேறாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் மனவேதனைகள் ஒன்றே. புரட்சிகரமான வார்த்தைகளால் கதையியின் போக்கை சோர்வு ஏற்படா வண்ணம் சிறப்பாக இந்நூலை படைத்திருக்கிறார் ஆசிரியர் ஆமினா முஹம்மத் அவர்கள்.
கிராமப் பின்புலம் கொண்ட பெண்கள் சிலர், இன்றளவும் சூழ்நிலைகளாலும் சந்தர்ப்பங்களாலும், பொருளாதார அடிப்படையிலும் மற்றும் பல காரணங்களாலும் பின்னப்பட்டு அதில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இதனைத் தன் கதைக்களத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
என்னதான் ஆணுக்குப் பெண் நிகர் என்றும், பெண் சுதந்திரம் என்றும், பெண்ணியம் என்றும் பேசுகின்ற நவீனமயமான இக்காலகட்டத்தில் எல்லா துறைகளிலும் கால் பதித்து அதில் வெற்றியும் பெற்று சிறந்து விளங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் மற்றுமொரு கறுப்பு பக்கமே இந்த "ஆகாத தீதார்" எனும் சிறுகதைத் தொகுப்பு.
இவ்வளவு ஏன், விண்வெளிக்குச் சென்று சாதனை படைக்கும் பெண்கள் வாழும் இவ்வுலகில் தான் தன் தலைமுடியை எவ்வளவு நீளம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தன் தாயிடமோ அல்லது கணவனிடமோ அனுமதி கேட்பது இன்றளவும் பல வீடுகளில் இருக்கும் பெண்களின் நிலை.
பிறர் பேசத் தயங்குகின்ற உணர்ச்சிமிக்க, பரபரப்பான விஷயங்களை துணிச்சலான எழுத்துக்களால் தன் படைப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் ஆமினா முஹம்மத் அவர்கள் மென்மேலும் பல படைப்புகளை வெளியிட இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இந்நூலில் என்னை ஆட்கொண்ட வாசகங்கள்:
1. கண்ணீர் மன்னிப்புக்கான மொழி (இன்ஸ்டண்ட் புனிதம்)
2. துரோகத்தின் வீரியம் வலியது (புகைப்படம்)
3. உலகில் பிரயோஜனமற்றது ஒன்று உள்ளதென்றால் அது பெண்களின் கோபம் (இயலாமைக்கு இரு
குணம்)
4. இயலாமைக்கு வீரியமிக்க கோபத்தையும் நீர்க்கச் செய்யும் வல்லமை உண்டு (இயலாமைக்கு இரு
குணம்)
5. "என் இளமைக் காலத்தில் என்னைப் பாதுகாத்துக் கொள்... பகரமாய் உன் முதுமையில் நான்
பராமரிக்கின்றேன்" என்ற ஒப்பந்தப்படியே ஆணின் கரத்தைப் பிடிக்கிறாள் பெண். அதை
உணர்வதற்குள் பலர் ஓர் ஆட்டம் ஆடி முடித்து விடுகிறார்கள். மிகச் சிலருக்கே முன்கூட்டியே உணரும்
பேறு அருளப்பட்டிருக்கும். (ரேகை போல் வாழ்க்கை)
வழக்கமான முறையில், பெண்களுக்கு ஆண்கள் தான் எதிரி என்று பெண்ணியம் பேசாமல், பெண்களுக்கு பெண்களே எதிரி என்று உண்மையை உடைத்து நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல் எழுதியிருக்கும் இவரின் எழுத்துக்களை அவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை.
இதிலுள்ள ஒவ்வொரு கதையிலும் மரணித்தவர்களின் வீட்டுச்சூழல் வெவ்வேறாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் மனவேதனைகள் ஒன்றே. புரட்சிகரமான வார்த்தைகளால் கதையியின் போக்கை சோர்வு ஏற்படா வண்ணம் சிறப்பாக இந்நூலை படைத்திருக்கிறார் ஆசிரியர் ஆமினா முஹம்மத் அவர்கள்.
கிராமப் பின்புலம் கொண்ட பெண்கள் சிலர், இன்றளவும் சூழ்நிலைகளாலும் சந்தர்ப்பங்களாலும், பொருளாதார அடிப்படையிலும் மற்றும் பல காரணங்களாலும் பின்னப்பட்டு அதில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இதனைத் தன் கதைக்களத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
என்னதான் ஆணுக்குப் பெண் நிகர் என்றும், பெண் சுதந்திரம் என்றும், பெண்ணியம் என்றும் பேசுகின்ற நவீனமயமான இக்காலகட்டத்தில் எல்லா துறைகளிலும் கால் பதித்து அதில் வெற்றியும் பெற்று சிறந்து விளங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் மற்றுமொரு கறுப்பு பக்கமே இந்த "ஆகாத தீதார்" எனும் சிறுகதைத் தொகுப்பு.
இவ்வளவு ஏன், விண்வெளிக்குச் சென்று சாதனை படைக்கும் பெண்கள் வாழும் இவ்வுலகில் தான் தன் தலைமுடியை எவ்வளவு நீளம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தன் தாயிடமோ அல்லது கணவனிடமோ அனுமதி கேட்பது இன்றளவும் பல வீடுகளில் இருக்கும் பெண்களின் நிலை.
பிறர் பேசத் தயங்குகின்ற உணர்ச்சிமிக்க, பரபரப்பான விஷயங்களை துணிச்சலான எழுத்துக்களால் தன் படைப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் ஆமினா முஹம்மத் அவர்கள் மென்மேலும் பல படைப்புகளை வெளியிட இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
இந்நூலில் என்னை ஆட்கொண்ட வாசகங்கள்:
1. கண்ணீர் மன்னிப்புக்கான மொழி (இன்ஸ்டண்ட் புனிதம்)
2. துரோகத்தின் வீரியம் வலியது (புகைப்படம்)
3. உலகில் பிரயோஜனமற்றது ஒன்று உள்ளதென்றால் அது பெண்களின் கோபம் (இயலாமைக்கு இரு
குணம்)
4. இயலாமைக்கு வீரியமிக்க கோபத்தையும் நீர்க்கச் செய்யும் வல்லமை உண்டு (இயலாமைக்கு இரு
குணம்)
5. "என் இளமைக் காலத்தில் என்னைப் பாதுகாத்துக் கொள்... பகரமாய் உன் முதுமையில் நான்
பராமரிக்கின்றேன்" என்ற ஒப்பந்தப்படியே ஆணின் கரத்தைப் பிடிக்கிறாள் பெண். அதை
உணர்வதற்குள் பலர் ஓர் ஆட்டம் ஆடி முடித்து விடுகிறார்கள். மிகச் சிலருக்கே முன்கூட்டியே உணரும்
பேறு அருளப்பட்டிருக்கும். (ரேகை போல் வாழ்க்கை)