புனைவு வெளி-1
தமிழ் வாசகர்கள், எழுத்தாளர்களின் புத்தகங்களை மட்டுமல்லாமல் எழுத்தாளர்களையும் வாசிக்க விரும்புபவர்கள். மேலும் பலரும் எழுத்தாளர்களின் புத்தகங்களை அறிமுகம் செய்வார்கள். ஒரு சிலரே எழுத்தாளர்களை வாசகர்களுக்கு கொண்டு செல்வார்கள். அப்படி அரியதொரு பணியை நா.விச்வநாதன் அவர்கள் செய்துள்ளார்கள். இது வாசகர்களுக்கு மட்டுமில்லை; எழுத்தாளர்களுக்கும் பயனுடையதாக இருக்கும்.
"பேசும் புதிய சக்தி" இதழில் ஒவ்வொரு மாதமும் மூத்த படைப்பாளிகளை பற்றி நா.விச்வநாதன் அவர்கள் எழுதி வந்த கட்டுரைகள் "புனைவுவெளி (சி.சு.செல்லப்பா முதல் தஞ்சை ப்ரகாஷ் வரை) என்ற புத்தகமாக வந்துள்ளது. நா.விச்வநாதன் அவர்கள் ஒவ்வொரு படைப்பாளிகளுடன் பழகிய, கேட்ட நிகழ்வுகளை எழுதியுள்ளார். மொத்தம் 18 படைப்பாளிகளை 112 பக்கங்களில் எழுதி உள்ளார்.
புத்தகம் எழுதிய எழுத்தாளர்களை வெளியில் இருந்து பார்க்கும் வாசகர்கள் அவர்கள் மீது ஒரு அபரீதமான மற்றும் ஆத்மார்த்தமான மதிப்பை கொண்டிருப்பார்கள். ஆனால் நா.விச்வநாதன் எழுதிய இக்கட்டுரைகள் அவர்களின் மற்றொரு பக்கத்தையும் அந்த மற்றொரு பக்கம் ஒரு சாதாரண மனிதரை விட அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளார்கள் என்பதையும் அதே நேரத்தில் அவர்களுடைய இறுதி நாட்கள் கொடுமையான நரக வேதனை தரக்கூடியதாகவும் இருந்திருக்கிறது. இதை படிக்கும் பொழுது ஒவ்வொரு வாசகர்களின் மனவோட்டமும் அதிர்ச்சியாகும் என்பது உண்மை.ஏனெனில் எனக்கும் இது அதிர்ச்சியைத் தான் கொடுத்தது.
முதல் கட்டுரை சி.சு.செல்லப்பா அவர்களைப் பற்றி. ஒரு மாத தாடி... கசங்கிய கதர் சட்டை, வேட்டி. முரட்டுத்தனமாக பிடிவாதமாக "எழுத்து" பத்திரிகையைக் கொண்டு வந்தவர். தன்னுடைய நூல்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டு தோளில் சுமந்து கொண்டு ஊர் ஊராக அலைந்து திரிந்தவர்.
ஒரு தடவை தன் நூல்களைத் தூக்கிக்கொண்டு ஒரு கல்லூரிக்கு சென்று இருக்கிறார். அங்கு தமிழ்ப் பேராசிரியர் ஒருவர், "உங்க புதிய புத்தகத்தை போன வாரமே வாங்கி விட்டோம்" என்றாராம். உண்மையில் ஒரு புத்தகம் கூட விற்காத நூல் அது. ஏன் இந்த பேராசிரியர் பொய் சொன்னார்? என்று வெகு காலம் வருத்தப்பட்டு கொண்டிருந்தார் என்கிறார் ஆசிரியர் நா. விச்வநாதன்.
"நாலு மாத வீட்டு வாடகை கொடுக்க வக்கில்ல. ஹிண்டு பேப்பர் ஒரு கேடா ஐயரே..."
"விஷ்ணுபுரமே இந்தப் பாப்பாரப் பயல்கள் கிட்டே மாட்டிண்டு முழிக்கறது. சம்பளம் இல்லேன்னா போய்யா.. பிரவசனம் பண்ணுவேன். தியாகப் பிரம்மம் மாதிரி உஞ்சவிருத்தி பண்ணி கொழந்தைகளைக் காப்பாத்துவேன்.."
"மூத்த மகளுக்குத் திருமணம். கல்யாண மந்திரங்களைத் தவறாக உச்சரித்துக் கொண்டிருந்த சாஸ்திரிகளை நோக்கிச் சத்தம் போட்டார். தாயோழி... என்னய்யா மந்திரம் சொல்கிறீர்...நகரும்... என்று தானே கணீரென்று மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்."
"ஒரு கட்டத்தில் குடும்பம் இவரை வெறுக்க ஆரம்பித்திருந்தது. "
"அவரின் துணைவியார் வரும் எழுத்தாளர்களை எல்லாம் திட்டித் தீர்த்தார். "
"கும்பகோணத்தில் ஒரு சொற்பொழிவு. இந்த ஆசிரியர் உட்பட மொத்தமே நாலே பேர் தான் கூட்டத்தில். "
"உறுபசியோடு துளி கௌரவத்திற்காக அல்லாடியவர். எதையும் அடையாமல் செத்துப்போனவர். "
ஆம்! இதுதான் கரிச்சான் குஞ்சு என்ற எழுத்தாளரின் நிலை...
தான் உண்டு, தன் எழுத்துண்டு, தனக்கு இசைவான சங்கீதமுண்டு என்று சுருக்கி கொண்டவர். தஞ்சாவூர் தெற்கு வீதியில் துணிக்கடை வைத்திருந்தவர்.
பிராமண-தலித் கலப்பு மணம் குறித்தும் அதனால் ஏற்படும் முரண்களையும் "சல்லிவேர்" என்ற தனது கடைசி சிறுகதையை கணையாழியில் எழுதியவர். கடுமையான எதிர்ப்பு. "ஒரு தப்பும் பண்ணலேயே ஏன் இந்த எதிர்ப்பு..." என்று கடைசிவரை கேட்டுக் கொண்டிருந்தவர்.
கும்பகோணம்-கோவிந்தபுரம் சங்கரமடம் இவருடைய வாசஸ்தலம். மராட்டிய மன்னன் சகஜி ஆஸ்தான வித்வானாக இருக்கச் சொல்லி தஞ்சாவூர் தர்பாருக்கு அழைத்த போது ஏற்க மறுத்தவர்.
ஆசிரியர் நா.விச்வநாதன் கடைசியாக இந்த எழுத்தாளரைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். "மகப்பேறு இல்லை. மனைவி காலமாகிவிட்டார். உறவினர்கள் அனுசரணையும் இல்லை. முதுமைப் பிரச்சனை - சங்கரமடமும் கண்டுகொள்ளவில்லை. அவர் காலமானதை இரண்டு நாட்கள் கழித்தே அறிந்து கொண்டோம். ஒரு எழுத்தாளின் மரண யாத்திரை வெகு சொற்பமான நபர்களோடு என்பதே இம்சை தருகிறது. அவருக்கான சடங்குகள் கூட முறையாக முழுமையாக நடைபெறவில்லை. கிட்டத்தட்ட அனாதையாகத் தான் எரிந்து போனார்."
இவற்றிற்கெல்லாம் சொந்தக்காரர் தஞ்சை ஸ்வாமிநாத ஆத்ரேய என்ற மணிக்கொடி மரபினர்.
புதுமைப்பித்தன்: தமிழ்ச் சிறுகதை மன்னன் என்று பெயரெடுத்தவர். எழு வந்தது 40 வயதுக்கு மேல். 15 ஆண்டுகள் மட்டுமே எழுதியவர். "கமலா பசிக்கிறது ரெண்டு வெற்றிலை போட்டுக் கொண்டால் பசி அடங்கி போகும்" என்றவர். இறுதியில் மருத்துவச் செலவுக்கு கூட பணமில்லாமல் காலமானார் இந்த சிறுகதை மன்னன்.
ஆர்.சூடாமணி: பெரியம்மை நோயினால் வளர்ச்சி குன்றிப் போய் நான்கு சுவர்களுக்குள் தனிமைச் சிறையில் வாழும் வாழ்க்கை. ஆனால் 574 கதைகள், உள்ளக்கடல் & மனதுக்கு இனியவள் என இரு நாவல்கள், இருவர் கண்டனர் என்ற நாடகம்.
தனக்கு இருந்த சொத்துக்கள் 21 கோடியையும் பல்வேறு சமூக நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுத்தார். எழுத்து சார்ந்த எந்த நிறுவனத்திற்கும் இல்லை என்பது புதிர்தான் என்கிறார் ஆசிரியர்.
காலத்தின் கோலம் என்று இதைத் தான் சொல்வார்கள் போலும்.
ஜி.நாகராஜன்: மதுரையில் பிரபலமான வக்கீலான கணேசய்யரின் ஏழு குழந்தைகளில் ஒருவர். மதுரைக் கல்லூரியில் சேர்ந்து கணிதத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று சர்.சி.வி.ராமன் கைகளால் தங்கப்பதக்கம் பெற்றவர். காரைக்குடியில் ஆசிரியர் வேலை. சென்னையில் கணக்காயர் வேலை. பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளர். பின்னர் ராணுவத்தில் சில காலம். மதுரை காந்தி மியூசியத்தில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அவருடைய கோணல்மாணலான நடவடிக்கைகளை காந்தியவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனநோயாளி என்று காரணம் காட்டி வெளியேற்றப்பட்டவர். "குறத்திமுடுக்கு", "நாளை மற்றுமொரு நாளே" படைப்புகளுக்குச் சொந்தக்காரர்.
எப்போதும் ஓர் கலவர மனோநிலை & தடுமாற்றம். இறுதியில் சாராயம், கஞ்சா, பாலியல் தொழிலாளிகளை நாடுதல் போன்ற தீய பழக்கங்களை ஏற்றுக் கொண்டவர். முதல் மனைவி சீக்கிரம் இறந்து போக அவரது தங்கையை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டவர். சிகரெட் கங்குகளால் சுட்டு மனைவியை இம்சை செய்தவர் என்கிறார் ஆசிரியர்.
அவருடைய இறுதி வாழ்வை பின்வருமாறு குறிப்பிடுகிறார் ஆசிரியர். "இறுதிப்படுக்கையில் ஜி.என். தாளாத இம்சைப்பட்டார். குளிருதே குளிருதே தாங்க முடியாம குளிருதே. இந்த குளிருக்கு எரிகின்ற சிதையில்தான் படுக்க வேண்டும் கடவுளே கடவுளே என்று அரற்றினார்" என்கிறார் ஆசிரியர்.
மணி (மெளனி): இவர் ஓயாமல் பேசுவது கண்டு கிண்டலாக வைத்த பெயர் மௌனி. 24 கதைகளை எழுதியவர். 'பூணூலைக் கழற்றி ஆணியில் மாட்டு' என்று வ.ரா. அதட்டியபோது மௌனி சிரித்தபடி "I would rather out cocks and put it there." என்று சொன்னவர். நான்கு மகன்கள். ஒரு மகள். ஒரு மகன் பெங்களூரில் குளியல் அறையில் மின்சார ஷாக் அடித்து இறந்தார். இன்னொரு மகன் சென்னையில் டிராம் வண்டியில் ஏறும்போது தவறி விழுந்து இறந்தார். இளைய மகன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தத்துவம் பயின்று மனநிலை பிறந்து இறந்து போனார்.
மௌனியின் குழப்பமான நிலை அவரை விலை மகளிர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றது. அபினோ, மதுவோ அவருக்கு இஷ்டமான வஸ்துவானது. அவர் இறப்பதற்கு முன் பேச முடியாமல் படுக்கையில் அவதிப்பட்டார் என்கிறார் ஆசிரியர்.
எம்.வி.வெங்கட்ராம்: சௌராஷ்டிரா சமூகம். நெசவு மற்றும் ஜரிகை வணிகத்தில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். 'தேனி' இதழை நடத்தியவர். "நித்ய கன்னி", "காதுகள்", "மாளிகை வாசம்", "பனி முடி மீது கண்ணகி" நாவல்களை எழுதியவர். கும்பகோணத்தில் தேர்தலில் நின்று தோற்றுப் போனவர். எல்லா செல்வமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் ஒன்றும் இல்லாமல் போனபோதும் மெல்லிய சிரிப்புக்கு சொந்தக்காரர். தன் காதுகளில் வந்து சதா தொந்தரவு செய்து கொண்டிருந்த விகாரமான ஒலிகளை ஆராய முயன்றவர்.
கும்பகோணம் பட்டாபிராமன் ராஜகோபாலன் என்ற கு.ப.ரா: வெறும் பத்தாண்டுகள் மட்டுமே எழுதினார். 6 நாவல்கள். நிறைய மொழிபெயர்ப்புகள். தந்தையின் மறைவு, மனைவியின் மறைவு, அடுத்தடுத்து இரு மகன்களின் மறைவு என ஏகப்பட்ட இழப்புகள். தனக்குக் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டபோது தனது சகோதரி கு.ப.சேது அம்மாளை விட்டு எழுத வைத்தார். சேது அம்மாள் அவற்றைத் தன் பெயரிலேயே வெளியிட்டுக் கொண்டார் என்கிறார் ஆசிரியர்.
ந.பிச்சமூர்த்தி: இயற்பெயர் வேங்கட மகாலிங்கம். இவருக்கு முன் பிறந்த இரண்டு குழந்தைகள் இறந்து விட்டனர். பிச்சை என்ற எளிய தரித்திரமான பெயரை வைத்தால் எமன் அணுக மாட்டான் என்ற நம்பிக்கையில் அவரை பிச்சை என்று குடும்பத்தினர் கூப்பிட்டனர். 127 சிறுகதைகள் 83 கவிதைகளுக்கு சொந்தக்காரர்.
தனது கடைசி காலத்தில், "இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஒரு சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கழுநீர் இல்லாத மாட்டுத் தொட்டியில் கருப்பைக் குழந்தையைப்போல மடங்கி உட்கார்ந்திருந்தார். வெறித்த பார்வை, மனப்பிறழ்வின் உச்சம். இம்சை தாங்கவில்லை" என்றனர் ந.பிச்சமூர்த்தி குடும்பத்தினர்.
இவர்கள் மற்றும் சிலரை, "தமிழ் இலக்கிய உலகை ஆண்டவர்கள்" என்பர் எழுத்தாளர்கள். ஆனால் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமல்ல, மாண்ட விதமும் அதிர்ச்சியாக உள்ளது. தமிழுக்கும், தமிழ் இலக்கிய வரலாற்றுக்கும் இந்நிகழ்வுகள் ஒரு சாபக்கேடு.
மேலும் இவர்கள் மட்டுமல்லாது லா.ச.ரா., கந்தடை நாரயணசாமி சுப்ரமணியம் என்ற க.நா.சு., தி.ஜானகிராமன், நகுலன், பல.சிங்காரம், கு.அழகிரிசாமி, காதம்பரி வெங்கட்ராமன், தஞ்சை பிரகாஷ் ஆகியோருடன் தான் பழகிய நாட்களையும் அவர்களுடைய நூல்களையும், கதைகளின் மனவோட்டங்களையும் பகிர்ந்துள்ளார் ஆசிரியர் நா.விச்வநாதன்.
தங்களது முன்னத்தி ஏர்களைப் பற்றி ஒருவர் பழகி அவர்களைப் பற்றி எழுதியுள்ளார் என்று எந்த எழுத்தாளர்களும் இந்த அறிய புத்தகத்தை கண்டு கொண்டார்களா என்று தெரியவில்லை.
புத்தகத்தின் இந்த பதிப்பில்(2017) ஆங்காங்கே ஒரு சில எழுத்து பிழைகள். அடுத்த பதிப்பில் நிவர்த்தி செய்தல் நல்லது.
"பேசும் புதிய சக்தி" இதழில் ஒவ்வொரு மாதமும் மூத்த படைப்பாளிகளை பற்றி நா.விச்வநாதன் அவர்கள் எழுதி வந்த கட்டுரைகள் "புனைவுவெளி (சி.சு.செல்லப்பா முதல் தஞ்சை ப்ரகாஷ் வரை) என்ற புத்தகமாக வந்துள்ளது. நா.விச்வநாதன் அவர்கள் ஒவ்வொரு படைப்பாளிகளுடன் பழகிய, கேட்ட நிகழ்வுகளை எழுதியுள்ளார். மொத்தம் 18 படைப்பாளிகளை 112 பக்கங்களில் எழுதி உள்ளார்.
புத்தகம் எழுதிய எழுத்தாளர்களை வெளியில் இருந்து பார்க்கும் வாசகர்கள் அவர்கள் மீது ஒரு அபரீதமான மற்றும் ஆத்மார்த்தமான மதிப்பை கொண்டிருப்பார்கள். ஆனால் நா.விச்வநாதன் எழுதிய இக்கட்டுரைகள் அவர்களின் மற்றொரு பக்கத்தையும் அந்த மற்றொரு பக்கம் ஒரு சாதாரண மனிதரை விட அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளார்கள் என்பதையும் அதே நேரத்தில் அவர்களுடைய இறுதி நாட்கள் கொடுமையான நரக வேதனை தரக்கூடியதாகவும் இருந்திருக்கிறது. இதை படிக்கும் பொழுது ஒவ்வொரு வாசகர்களின் மனவோட்டமும் அதிர்ச்சியாகும் என்பது உண்மை.ஏனெனில் எனக்கும் இது அதிர்ச்சியைத் தான் கொடுத்தது.
முதல் கட்டுரை சி.சு.செல்லப்பா அவர்களைப் பற்றி. ஒரு மாத தாடி... கசங்கிய கதர் சட்டை, வேட்டி. முரட்டுத்தனமாக பிடிவாதமாக "எழுத்து" பத்திரிகையைக் கொண்டு வந்தவர். தன்னுடைய நூல்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டு தோளில் சுமந்து கொண்டு ஊர் ஊராக அலைந்து திரிந்தவர்.
ஒரு தடவை தன் நூல்களைத் தூக்கிக்கொண்டு ஒரு கல்லூரிக்கு சென்று இருக்கிறார். அங்கு தமிழ்ப் பேராசிரியர் ஒருவர், "உங்க புதிய புத்தகத்தை போன வாரமே வாங்கி விட்டோம்" என்றாராம். உண்மையில் ஒரு புத்தகம் கூட விற்காத நூல் அது. ஏன் இந்த பேராசிரியர் பொய் சொன்னார்? என்று வெகு காலம் வருத்தப்பட்டு கொண்டிருந்தார் என்கிறார் ஆசிரியர் நா. விச்வநாதன்.
"நாலு மாத வீட்டு வாடகை கொடுக்க வக்கில்ல. ஹிண்டு பேப்பர் ஒரு கேடா ஐயரே..."
"விஷ்ணுபுரமே இந்தப் பாப்பாரப் பயல்கள் கிட்டே மாட்டிண்டு முழிக்கறது. சம்பளம் இல்லேன்னா போய்யா.. பிரவசனம் பண்ணுவேன். தியாகப் பிரம்மம் மாதிரி உஞ்சவிருத்தி பண்ணி கொழந்தைகளைக் காப்பாத்துவேன்.."
"மூத்த மகளுக்குத் திருமணம். கல்யாண மந்திரங்களைத் தவறாக உச்சரித்துக் கொண்டிருந்த சாஸ்திரிகளை நோக்கிச் சத்தம் போட்டார். தாயோழி... என்னய்யா மந்திரம் சொல்கிறீர்...நகரும்... என்று தானே கணீரென்று மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்."
"ஒரு கட்டத்தில் குடும்பம் இவரை வெறுக்க ஆரம்பித்திருந்தது. "
"அவரின் துணைவியார் வரும் எழுத்தாளர்களை எல்லாம் திட்டித் தீர்த்தார். "
"கும்பகோணத்தில் ஒரு சொற்பொழிவு. இந்த ஆசிரியர் உட்பட மொத்தமே நாலே பேர் தான் கூட்டத்தில். "
"உறுபசியோடு துளி கௌரவத்திற்காக அல்லாடியவர். எதையும் அடையாமல் செத்துப்போனவர். "
ஆம்! இதுதான் கரிச்சான் குஞ்சு என்ற எழுத்தாளரின் நிலை...
தான் உண்டு, தன் எழுத்துண்டு, தனக்கு இசைவான சங்கீதமுண்டு என்று சுருக்கி கொண்டவர். தஞ்சாவூர் தெற்கு வீதியில் துணிக்கடை வைத்திருந்தவர்.
பிராமண-தலித் கலப்பு மணம் குறித்தும் அதனால் ஏற்படும் முரண்களையும் "சல்லிவேர்" என்ற தனது கடைசி சிறுகதையை கணையாழியில் எழுதியவர். கடுமையான எதிர்ப்பு. "ஒரு தப்பும் பண்ணலேயே ஏன் இந்த எதிர்ப்பு..." என்று கடைசிவரை கேட்டுக் கொண்டிருந்தவர்.
கும்பகோணம்-கோவிந்தபுரம் சங்கரமடம் இவருடைய வாசஸ்தலம். மராட்டிய மன்னன் சகஜி ஆஸ்தான வித்வானாக இருக்கச் சொல்லி தஞ்சாவூர் தர்பாருக்கு அழைத்த போது ஏற்க மறுத்தவர்.
ஆசிரியர் நா.விச்வநாதன் கடைசியாக இந்த எழுத்தாளரைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். "மகப்பேறு இல்லை. மனைவி காலமாகிவிட்டார். உறவினர்கள் அனுசரணையும் இல்லை. முதுமைப் பிரச்சனை - சங்கரமடமும் கண்டுகொள்ளவில்லை. அவர் காலமானதை இரண்டு நாட்கள் கழித்தே அறிந்து கொண்டோம். ஒரு எழுத்தாளின் மரண யாத்திரை வெகு சொற்பமான நபர்களோடு என்பதே இம்சை தருகிறது. அவருக்கான சடங்குகள் கூட முறையாக முழுமையாக நடைபெறவில்லை. கிட்டத்தட்ட அனாதையாகத் தான் எரிந்து போனார்."
இவற்றிற்கெல்லாம் சொந்தக்காரர் தஞ்சை ஸ்வாமிநாத ஆத்ரேய என்ற மணிக்கொடி மரபினர்.
புதுமைப்பித்தன்: தமிழ்ச் சிறுகதை மன்னன் என்று பெயரெடுத்தவர். எழு வந்தது 40 வயதுக்கு மேல். 15 ஆண்டுகள் மட்டுமே எழுதியவர். "கமலா பசிக்கிறது ரெண்டு வெற்றிலை போட்டுக் கொண்டால் பசி அடங்கி போகும்" என்றவர். இறுதியில் மருத்துவச் செலவுக்கு கூட பணமில்லாமல் காலமானார் இந்த சிறுகதை மன்னன்.
ஆர்.சூடாமணி: பெரியம்மை நோயினால் வளர்ச்சி குன்றிப் போய் நான்கு சுவர்களுக்குள் தனிமைச் சிறையில் வாழும் வாழ்க்கை. ஆனால் 574 கதைகள், உள்ளக்கடல் & மனதுக்கு இனியவள் என இரு நாவல்கள், இருவர் கண்டனர் என்ற நாடகம்.
தனக்கு இருந்த சொத்துக்கள் 21 கோடியையும் பல்வேறு சமூக நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுத்தார். எழுத்து சார்ந்த எந்த நிறுவனத்திற்கும் இல்லை என்பது புதிர்தான் என்கிறார் ஆசிரியர்.
காலத்தின் கோலம் என்று இதைத் தான் சொல்வார்கள் போலும்.
ஜி.நாகராஜன்: மதுரையில் பிரபலமான வக்கீலான கணேசய்யரின் ஏழு குழந்தைகளில் ஒருவர். மதுரைக் கல்லூரியில் சேர்ந்து கணிதத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று சர்.சி.வி.ராமன் கைகளால் தங்கப்பதக்கம் பெற்றவர். காரைக்குடியில் ஆசிரியர் வேலை. சென்னையில் கணக்காயர் வேலை. பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளர். பின்னர் ராணுவத்தில் சில காலம். மதுரை காந்தி மியூசியத்தில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அவருடைய கோணல்மாணலான நடவடிக்கைகளை காந்தியவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனநோயாளி என்று காரணம் காட்டி வெளியேற்றப்பட்டவர். "குறத்திமுடுக்கு", "நாளை மற்றுமொரு நாளே" படைப்புகளுக்குச் சொந்தக்காரர்.
எப்போதும் ஓர் கலவர மனோநிலை & தடுமாற்றம். இறுதியில் சாராயம், கஞ்சா, பாலியல் தொழிலாளிகளை நாடுதல் போன்ற தீய பழக்கங்களை ஏற்றுக் கொண்டவர். முதல் மனைவி சீக்கிரம் இறந்து போக அவரது தங்கையை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டவர். சிகரெட் கங்குகளால் சுட்டு மனைவியை இம்சை செய்தவர் என்கிறார் ஆசிரியர்.
அவருடைய இறுதி வாழ்வை பின்வருமாறு குறிப்பிடுகிறார் ஆசிரியர். "இறுதிப்படுக்கையில் ஜி.என். தாளாத இம்சைப்பட்டார். குளிருதே குளிருதே தாங்க முடியாம குளிருதே. இந்த குளிருக்கு எரிகின்ற சிதையில்தான் படுக்க வேண்டும் கடவுளே கடவுளே என்று அரற்றினார்" என்கிறார் ஆசிரியர்.
மணி (மெளனி): இவர் ஓயாமல் பேசுவது கண்டு கிண்டலாக வைத்த பெயர் மௌனி. 24 கதைகளை எழுதியவர். 'பூணூலைக் கழற்றி ஆணியில் மாட்டு' என்று வ.ரா. அதட்டியபோது மௌனி சிரித்தபடி "I would rather out cocks and put it there." என்று சொன்னவர். நான்கு மகன்கள். ஒரு மகள். ஒரு மகன் பெங்களூரில் குளியல் அறையில் மின்சார ஷாக் அடித்து இறந்தார். இன்னொரு மகன் சென்னையில் டிராம் வண்டியில் ஏறும்போது தவறி விழுந்து இறந்தார். இளைய மகன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. தத்துவம் பயின்று மனநிலை பிறந்து இறந்து போனார்.
மௌனியின் குழப்பமான நிலை அவரை விலை மகளிர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றது. அபினோ, மதுவோ அவருக்கு இஷ்டமான வஸ்துவானது. அவர் இறப்பதற்கு முன் பேச முடியாமல் படுக்கையில் அவதிப்பட்டார் என்கிறார் ஆசிரியர்.
எம்.வி.வெங்கட்ராம்: சௌராஷ்டிரா சமூகம். நெசவு மற்றும் ஜரிகை வணிகத்தில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்தவர். 'தேனி' இதழை நடத்தியவர். "நித்ய கன்னி", "காதுகள்", "மாளிகை வாசம்", "பனி முடி மீது கண்ணகி" நாவல்களை எழுதியவர். கும்பகோணத்தில் தேர்தலில் நின்று தோற்றுப் போனவர். எல்லா செல்வமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் ஒன்றும் இல்லாமல் போனபோதும் மெல்லிய சிரிப்புக்கு சொந்தக்காரர். தன் காதுகளில் வந்து சதா தொந்தரவு செய்து கொண்டிருந்த விகாரமான ஒலிகளை ஆராய முயன்றவர்.
கும்பகோணம் பட்டாபிராமன் ராஜகோபாலன் என்ற கு.ப.ரா: வெறும் பத்தாண்டுகள் மட்டுமே எழுதினார். 6 நாவல்கள். நிறைய மொழிபெயர்ப்புகள். தந்தையின் மறைவு, மனைவியின் மறைவு, அடுத்தடுத்து இரு மகன்களின் மறைவு என ஏகப்பட்ட இழப்புகள். தனக்குக் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டபோது தனது சகோதரி கு.ப.சேது அம்மாளை விட்டு எழுத வைத்தார். சேது அம்மாள் அவற்றைத் தன் பெயரிலேயே வெளியிட்டுக் கொண்டார் என்கிறார் ஆசிரியர்.
ந.பிச்சமூர்த்தி: இயற்பெயர் வேங்கட மகாலிங்கம். இவருக்கு முன் பிறந்த இரண்டு குழந்தைகள் இறந்து விட்டனர். பிச்சை என்ற எளிய தரித்திரமான பெயரை வைத்தால் எமன் அணுக மாட்டான் என்ற நம்பிக்கையில் அவரை பிச்சை என்று குடும்பத்தினர் கூப்பிட்டனர். 127 சிறுகதைகள் 83 கவிதைகளுக்கு சொந்தக்காரர்.
தனது கடைசி காலத்தில், "இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஒரு சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கழுநீர் இல்லாத மாட்டுத் தொட்டியில் கருப்பைக் குழந்தையைப்போல மடங்கி உட்கார்ந்திருந்தார். வெறித்த பார்வை, மனப்பிறழ்வின் உச்சம். இம்சை தாங்கவில்லை" என்றனர் ந.பிச்சமூர்த்தி குடும்பத்தினர்.
இவர்கள் மற்றும் சிலரை, "தமிழ் இலக்கிய உலகை ஆண்டவர்கள்" என்பர் எழுத்தாளர்கள். ஆனால் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமல்ல, மாண்ட விதமும் அதிர்ச்சியாக உள்ளது. தமிழுக்கும், தமிழ் இலக்கிய வரலாற்றுக்கும் இந்நிகழ்வுகள் ஒரு சாபக்கேடு.
மேலும் இவர்கள் மட்டுமல்லாது லா.ச.ரா., கந்தடை நாரயணசாமி சுப்ரமணியம் என்ற க.நா.சு., தி.ஜானகிராமன், நகுலன், பல.சிங்காரம், கு.அழகிரிசாமி, காதம்பரி வெங்கட்ராமன், தஞ்சை பிரகாஷ் ஆகியோருடன் தான் பழகிய நாட்களையும் அவர்களுடைய நூல்களையும், கதைகளின் மனவோட்டங்களையும் பகிர்ந்துள்ளார் ஆசிரியர் நா.விச்வநாதன்.
தங்களது முன்னத்தி ஏர்களைப் பற்றி ஒருவர் பழகி அவர்களைப் பற்றி எழுதியுள்ளார் என்று எந்த எழுத்தாளர்களும் இந்த அறிய புத்தகத்தை கண்டு கொண்டார்களா என்று தெரியவில்லை.
புத்தகத்தின் இந்த பதிப்பில்(2017) ஆங்காங்கே ஒரு சில எழுத்து பிழைகள். அடுத்த பதிப்பில் நிவர்த்தி செய்தல் நல்லது.